திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு – நாகை இறால் விவசாயிகள் கவலை

athibantv by athibantv
செப்டம்பர் 3, 2025
in Business
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.7K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு – நாகை இறால் விவசாயிகள் கவலை
அமெரிக்கா, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியதால், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதனால் இறால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமே ஆபத்துக்குள்ளாகும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்தியாவின் அந்நியச் செலாவணியில் கடல் உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் இறால் ஏற்றுமதி மிகப்பெரிய பங்கினை பெற்றுள்ளது. கடலிலிருந்து பிடிக்கப்படும் இறால்களும், பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால்களும் தமிழகத்தில் இருந்து பெருமளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Related posts

BSNL INDIA 14 08 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1-க்கு சிம் கார்டு; பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் அறிவிப்பு

ஆகஸ்ட் 14, 2026
Gold price

தொடர் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சரிவு: சென்னையில் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

ஆகஸ்ட் 14, 2026

தமிழகத்தில் இறால் உற்பத்தியில் நாகை மாவட்டமே முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் உற்பத்தியாகும் இறால்களில் சுமார் 60 சதவீதம் நாகை மாவட்டத்தில் தான் கிடைக்கின்றன. மேலும், இந்தத் துறையில் பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளே ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டண உயர்வு, இடுபொருட்கள் விலை அதிகரிப்பு, ஏற்றுமதியாளர்களால் திணிக்கப்படும் விலை வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகளால் ஏற்கனவே சிரமப்பட்டு வந்த இறால் விவசாயிகளுக்கு, தற்போது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி பேராபத்தாக மாறியுள்ளது.

ஆகஸ்ட் 27ஆம் தேதி அதிகாலை முதல் இந்த வரி அமலுக்கு வந்ததால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 500 டன் இறாலை திரும்பப் பெறுமாறு அமெரிக்க இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் இறால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி தங்களின் உற்பத்திக்கு சரியான விலை கிடைக்குமா என்ற கேள்வியும் அவர்களிடையே எழுந்துள்ளது.

பண்ணைகளில் உற்பத்தியாகும் இறால்களுக்கு உள்ளூர் சந்தையில் கேள்வி இல்லை. சுமார் 95 சதவீதம் ஏற்றுமதியில்தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வரிவிதிப்பால் நேரடி பாதிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படாது. அவர்கள் தங்களுக்கான கூடுதல் லாபத்தைச் சேர்த்துக் கொண்டு விற்பனையைத் தொடர்வார்கள். ஆனால் அதன் சுமை முழுவதுமாக இறால் விவசாயிகளின் மீது விழும்.

இதன் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் கூறும் விலைக்கு உடன்பட்டு இறாலை விற்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால், இந்த சீசனில் இறால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை தொடர்ந்து நீண்டால், பெரும்பான்மையான இறால் விவசாயிகள் தொழிலை விட்டே விலக வேண்டிய நிலை உருவாகும் அபாயம் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Business

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்
  • அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்
  • பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்
  • அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: ஆகஸ்ட் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு
  • பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்; ஸ்மிருதி இரானிக்கு முக்கியப் பொறுப்பு
  • ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • தஞ்சாவூரில் பதாகை அகற்றியதால் விசிகவினர் சாலை மறியல்; எஸ்ஐயை தாக்கிய இளைஞர் கைது
  • அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சுய விருப்பத்தை உறுதி செய்த பிறகே ஏற்றேன் என சபாநாயகர் விளக்கம்
  • பிஹார் அசோக் தாம் கோயிலில் மின்கம்பி அறுந்ததால் கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு
  • பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் அதிருப்தி: முதல்வர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என விவசாயிகள் சங்கம்
Renaming Kerala to ‘Keralam’

குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்

ஆகஸ்ட் 17, 2026
Premalatha mdmk

அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்

ஆகஸ்ட் 17, 2026
Rupkumari Chaudhary. Vanathi Srinivasan.

பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp