செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப இலங்கை நாடாளுமன்றம் அனுமதி

athibantv by athibantv
ஆகஸ்ட் 13, 2026
in World, Latest-news-tamil
A A
0
Sri Lankan Parliament grants approval.
📢 WhatsApp Channel Join
👁️ 3.6K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப இலங்கை நாடாளுமன்றம் அனுமதி

உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான குடிவரவு அனுமதிக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கிய காலகட்டத்தில், அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களவர்களால் தமிழர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையைச் சேர்ந்த ஏராளமான தமிழ் மக்கள் பாதுகாப்பு தேடி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர்.

Related posts

Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026

1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு மட்டும் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையமான UNHCR, தமிழக மற்றும் இந்திய அரசுகளின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் சுமார் 58 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இதேபோல், முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 34 ஆயிரமாக உள்ளது. மேலும், ஒடிசா மாநிலம் மால்கன்கிரியில் உள்ள முகாமிலும் 60 பேர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகள் குறித்து இலங்கை ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள அகதிகளில் சிலர் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் உதவியுடனும், மற்றவர்கள் சுயமாகவும் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இலங்கைக்கு மீண்டும் வர விரும்பும் அகதிகளுக்கு தேவையான குடிவரவு அனுமதியை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கைக்கு திரும்ப விரும்புவோர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறியவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலம் தங்களது இலங்கை குடியுரிமை அல்லது அடையாளத்தை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, கொலை, அரசுக்கு எதிரான துரோகம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, அதன் மூலம் இலங்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று இலங்கை ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் ஈழத் தமிழர்களில் தாயகம் திரும்ப விரும்புவோருக்கு இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
  • தமிழ் ஹாக்கி லீக்: தயாந்த் வீரன்ஸை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐசிஎஃப் அணி
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
US-Iran conflict pause

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp