‘போராட்டத்தை முடிப்பதாகக் கூறி ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார்’: மத்திய இணை அமைச்சர் சாடல்
பிரதமர் இல்லம் அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, நீட் குறித்த விவாதத்திற்கு அரசு ஒப்புக்கொண்ட பின்னரும் வார்த்தை தவறிவிட்டார் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் சாடியுள்ளார்.
டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாடாளுமன்றத்தில் நீட் குறித்து விவாதிக்க அரசு ஒப்புக்கொண்டால் போராட்டத்தைக் கைவிடுவதாகக் கூறிய ராகுல் காந்தி, பின்னர் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கூறிப் பிடிவாதம் பிடித்ததாகக் கூறப்பட்டது.
பிரதமர் மோடி இச்சுழலில் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இந்த விவகாரத்தில் அறவே ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.



