திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

athibantv by athibantv
செப்டம்பர் 1, 2025
in Political, Tamilnadu
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’

ஆகஸ்ட் 17, 2026
VCK as the ruling party in Tamil Nadu Thirumavalavan vows at the conference

விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும்; தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்: திருமாவளவன்

ஆகஸ்ட் 17, 2026

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச் சாவடிகளில், இன்று நள்ளிரவு (நாளை முதல்) ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

ஏற்கனவே விலைவாசி, வரி, கட்டண உயர்வு காரணமாக மக்கள் சிரமப்படுகிற சூழ்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மீண்டும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மொத்தம் 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 78 சாவடிகளில் சுங்கம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதமே 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 38 சுங்கச் சாவடிகளில் நாளை (செப்டம்பர் 1) முதல் உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு சாவடியிலும் வாகன வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.20 வரை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கக்கட்டணம் 2008-ம் ஆண்டின் விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுகிறது என்றாலும், இதில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்கான முதலீடு எவ்வளவு? அதில் ஏற்கனவே எவ்வளவு திரும்பப்பெறப்பட்டது? என்ற விவரம் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இதே நேரத்தில், சாலைகள் பராமரிக்கப்படாமை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. பராமரிப்பு செய்யாத நிலையில் கட்டண உயர்வு செய்வது தார்மீக ரீதியில் பொருத்தமற்றது.

விதிப்படி 60 கிலோமீட்டருக்கு ஒரே ஒரு சுங்கச் சாவடி மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 82 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தபோது, மத்திய அரசுடன் பேசி 48 சுங்கச்சாவடிகளில் 32 மூடப்படும், 16 மட்டும் இருக்கும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக மக்களை ஏமாற்றுகின்றன.

மத்திய அரசு சுங்க வசூலில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக கூறினாலும், அதே நேரத்தில் கட்டண உயர்வை நிறுத்தவில்லை. ரூ.3,000 செலுத்தினால் ஆண்டுக்கு 200 முறை சுங்கம் செலுத்தாமல் செல்லலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் மறுபுறம் கட்டணம் உயர்த்தப்படுவது முறையற்றது.

நெடுஞ்சாலை முதலீடு வட்டி சேர்த்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு சுங்க வசூலை நிறுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு அதை பின்பற்றுவதில்லை. தொடர்ந்து வசூல் செய்வதால் இது நிரந்தர சுமையாக மாறி வருகிறது.

சுங்கக் கட்டண உயர்வு வாகன உரிமையாளர்களை மட்டுமே அல்லாது, பொதுமக்களையும் பாதிக்கும். வாடகை வாகனங்களின் கட்டணமும், சரக்குந்து கட்டணமும் உயரும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நாளை (செப்டம்பர் 1) முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’
  • ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை: சாத்தியமா? எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
  • விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும்; தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்: திருமாவளவன்
  • குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்
  • அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்
  • பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்
  • அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: ஆகஸ்ட் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு
  • பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்; ஸ்மிருதி இரானிக்கு முக்கியப் பொறுப்பு
  • ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • தஞ்சாவூரில் பதாகை அகற்றியதால் விசிகவினர் சாலை மறியல்; எஸ்ஐயை தாக்கிய இளைஞர் கைது
Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’

ஆகஸ்ட் 17, 2026
Trump 344

ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை: சாத்தியமா? எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஆகஸ்ட் 17, 2026
VCK as the ruling party in Tamil Nadu Thirumavalavan vows at the conference

விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும்; தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்: திருமாவளவன்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp