செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் ‘சுத்திகரிப்பு சடங்கு’: விசாரணைக்கு நட்டா உறுதி

athibantv by athibantv
ஆகஸ்ட் 13, 2026
in India, Latest-news-tamil, Political
A A
0
‘Purification ritual’ on stage at event attended by Kharge – J.P. Nadda assures an inquiry.
📢 WhatsApp Channel Join
👁️ 3.6K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் ‘சுத்திகரிப்பு சடங்கு’: விசாரணைக்கு நட்டா உறுதி

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் ‘சுத்திகரிப்பு சடங்கு’ நடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பாஜக ஆதரவு இல்லை என்றும், இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 8-ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவடைந்த பின்னர், அந்த இடத்தில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. பாஜகவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் இந்தச் சடங்கை நடத்தியதாக உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் குற்றம்சாட்டியிருந்தார்.

Related posts

TTV Dhinakaran

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்

ஆகஸ்ட் 18, 2026
D.K. Shivakumar’s appeal

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

ஆகஸ்ட் 18, 2026

மல்லிகார்ஜுன கார்கே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே இந்தச் சடங்கு நடத்தப்பட்டதாக கணேஷ் கோடியல் கூறியிருந்தார். சாதியின் பெயரில் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே, இதுபோன்ற சடங்கு மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் எனத் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையிலான அடிப்படைக் கொள்கை வேறுபாட்டை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

மேலும், சம்பவம் தொடர்பாக நைனிடால் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை என்றும் கார்கே தெரிவித்தார். தீண்டாமைக்கு இணையான இந்தச் செயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சரும் அவைத் தலைவருமான ஜே.பி.நட்டா, இதுபோன்ற சம்பவங்களை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என்றும், சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் இந்த விவகாரத்தை தீவிரமாக கவனிப்பார் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டறியப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜே.பி.நட்டா உறுதி அளித்தார். அதேநேரத்தில், இந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக காங்கிரஸ் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தீண்டாமை என்பது ஒரு பாவம் என்றும், கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளை கடந்து அனைவரும் இதை கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மனிதர்கள் அனைவரும் தூய்மையானவர்களே என்றும், ஒருவரை ஒருவர் ‘சுத்திகரிக்க’ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
TTV Dhinakaran

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்

ஆகஸ்ட் 18, 2026
D.K. Shivakumar’s appeal

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

ஆகஸ்ட் 18, 2026
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp