செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் அதிரடி கைது!

athibantv by athibantv
ஜூலை 24, 2026
in India, Crime, Latest-news-tamil
A A
0
Sabarimala lear
📢 WhatsApp Channel Join
👁️ 4.7K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் அதிரடி கைது!

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் தங்கம் காணாமல் போன விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவரான பி.எஸ்.பிரசாந்த் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை கருவறை கதவு நிலைகள் மற்றும் துவார பாலகர் சிலைகளுக்குத் தங்க மின்முலாம் பூசுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டபோது கணிசமான தங்கம் திருடப்பட்டதாகக் கூறி சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விரிவான விசாரணையைத் தொடங்கியது.

கடந்த 2025-ம் ஆண்டு தேவஸ்வம் போர்டு தலைவராகப் பிரசாந்த் பதவி வகித்தபோது, 2019-ல் நடைபெற்ற தங்கம் திருட்டை மறைப்பதற்காக, பழுது ஏதும் இல்லாத துவார பாலகர் சிலைகளில் பழுது இருப்பதாகக் கூறி மீண்டும் அனுப்பி வைத்ததாகச் சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய உலோகவியல் ஆய்வகத்தின் அறிக்கை மூலம், இந்த வழக்கில் குற்றவாளிகள் தங்கம் திருடிய முறை மற்றும் அதற்குப் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த தெளிவான அறிவியல் பூர்வ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

TTV Dhinakaran

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்

ஆகஸ்ட் 18, 2026
D.K. Shivakumar’s appeal

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

ஆகஸ்ட் 18, 2026

ஆதாரங்களின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து பிரசாந்தை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர். மேலும், இதே வழக்கு தொடர்பாக தேவஸ்வம் போர்டின் முன்னாள் உறுப்பினர் அஜி குமார் மற்றும் திருவாபரண ஆணையர் ஆர்.ரெஜிலால் ஆகியோரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளையில், தான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக முகநூலில் பதிவிட்ட பிரசாந்த், தன் மீதான இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 2019-ல் நடந்த தங்கம் திருட்டை வெளிக்கொண்டு வந்ததே தங்கள் நிர்வாகம் தான் என்றும் கூறி, தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeIndia

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
TTV Dhinakaran

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்

ஆகஸ்ட் 18, 2026
D.K. Shivakumar’s appeal

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

ஆகஸ்ட் 18, 2026
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp