செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

விபத்து இழப்பீட்டுத் தொகை காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை

athibantv by athibantv
ஆகஸ்ட் 14, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Supreme Court Order
📢 WhatsApp Channel Join
👁️ 978 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

விபத்து இழப்பீட்டுத் தொகை காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை

விபத்து இழப்பீட்டுத் தொகை காசோலை மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த விபத்து வழக்கு ஒன்றில், இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,565 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நீதிபதியின் உதவியாளருக்கு உதவியாளராக பணியாற்றி வந்த அறிவுச்செல்வி என்பவர், நீதிமன்ற உத்தரவு நகலை திருத்தியதுடன், நீதிபதியின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ரூ.4,78,000 தொகையை தனது பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Related posts

Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’

ஆகஸ்ட் 17, 2026
Trump 344

ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை: சாத்தியமா? எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஆகஸ்ட் 17, 2026

இதேபோல் மேலும் 6 விபத்து வழக்குகளின் நீதிமன்ற உத்தரவுகளை முறைகேடாக திருத்திய அறிவுச்செல்வி, மொத்தம் ரூ.38,79,982 இழப்பீட்டுத் தொகையை தனது பெயரிலும், தனது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசன் ஆகியோரின் பெயர்களிலும் சட்டவிரோதமாக மாற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பிட்ட நபர்களின் பெயர்களில் இழப்பீட்டுத் தொகை வங்கிக்கு செலுத்தப்படுவதை கவனித்த வங்கி மேலாளர், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், 2024-ம் ஆண்டு வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது.

இந்த வழக்கில் 3 மாவட்ட நீதிபதிகள் உட்பட அரசுத் தரப்பில் மொத்தம் 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசுத் தரப்பில் 103 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளில் 80 நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, முதன்மை குற்றவாளியான அறிவுச்செல்விக்கு 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அவரது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசன் ஆகியோருக்கு 8 பிரிவுகளின் கீழ் தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’
  • ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை: சாத்தியமா? எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
  • விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும்; தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்: திருமாவளவன்
  • குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்
  • அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்
  • பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்
  • அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: ஆகஸ்ட் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு
  • பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்; ஸ்மிருதி இரானிக்கு முக்கியப் பொறுப்பு
  • ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • தஞ்சாவூரில் பதாகை அகற்றியதால் விசிகவினர் சாலை மறியல்; எஸ்ஐயை தாக்கிய இளைஞர் கைது
Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’

ஆகஸ்ட் 17, 2026
Trump 344

ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை: சாத்தியமா? எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஆகஸ்ட் 17, 2026
VCK as the ruling party in Tamil Nadu Thirumavalavan vows at the conference

விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும்; தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்: திருமாவளவன்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp