மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் முழுவதும் குழந்தைகளை மையப்படுத்திய கல்வியாக மாற்றப்பட்டு, மாணவர்களின் புத்தகப்பைச் சுமை குறைக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய பாடத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட அறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.
பாடநூல்களில் க்யூஆர் கோடு, கதைகள் மூலம் கணிதம், ஸ்டீம் கல்வி முறை, செயற்கைக்கோள் உருவாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சிகள் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மனப்பாட முறையை ஒழித்து மென்திறன்கள் வளர்க்கப்படும் என்றும், 2027 முதல் கட்டம் கட்டமாக புதிய பாடநூல்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.



