புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
No Result
View All Result
  • Login
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
AthibAn Tv | Tamil News

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக; தமிழக அரசுக்கு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!

athibantv by athibantv
ஜூலை 19, 2026
in Tamilnadu, Political
A A
0
பிரேமலதா
📢 WhatsApp Channel Join
👁️ 4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக; தமிழக அரசுக்கு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related posts

TVK functionary arrested for attempting to snatch a chain from a woman riding a scooter near Karur.

கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது

ஆகஸ்ட் 19, 2026
Minister Aadav Arjuna

தமிழகத்தில் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்ட் 19, 2026

அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாகப் பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழல் மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தேமுதிக சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயத்திற்குத் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் இலவச மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு, தமிழகத்தை மீண்டும் மின் மிகை மாநிலமாக மாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது
  • தமிழகத்தில் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
  • காயத்ரி கோபிசந்த் உட்பட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு
  • அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி: மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3 சகோதரர்கள்
  • லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்
  • 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • திமுக பாதையில் தவெக அரசு செல்கிறதோ? அண்ணாமலை கடும் விமர்சனம்
  • ஆகாஷ் கைது விவகாரம்: கழுத்தில் கயிறை போட்டு உயிர் போகும் அளவுக்கு இழுத்து துன்பப்படுத்தும் காவல்துறை… சமூக வலைதளங்களில் கேள்வி
  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
TVK functionary arrested for attempting to snatch a chain from a woman riding a scooter near Karur.

கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது

ஆகஸ்ட் 19, 2026
Minister Aadav Arjuna

தமிழகத்தில் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்ட் 19, 2026
Arjuna Awards for 17 individuals, including Gayatri Gopichand and Divya.

காயத்ரி கோபிசந்த் உட்பட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

ஆகஸ்ட் 19, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© AthibAn TV
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp