திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

athibantv by athibantv
ஆகஸ்ட் 14, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Senthil Balaji
📢 WhatsApp Channel Join
👁️ 4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது மற்றும் மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களை வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related posts

Amit Shah’s speech in Puducherry

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்

ஆகஸ்ட் 17, 2026
Gold worth ₹2 crore seized on a Chennai train.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

ஆகஸ்ட் 17, 2026

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவர், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளிலேயே ரமேஷ் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் குறித்து எந்த குறிப்பும் இல்லை என்றும், ஆரம்பத்தில் அவர் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை என்றும் வாதிட்டனர்.

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக எந்த தவறும் நடைபெறவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்கள் மற்றும் பதில் மனுக்களின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மதுபானங்கள் கொள்முதல் செய்வதற்காக நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாகவும், பார் உரிமையாளர்களிடம் இருந்து கட்சி நிதி பெறப்பட்டதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்கும் தற்போதைய வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், மனுதாரரின் செல்போனில் டாஸ்மாக் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹவாலா பணப் பரிமாற்றத்திலும் மனுதாரர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அரசு தரப்பு, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியது.

இரு தரப்பினரின் வாதங்களையும் முழுமையாக கேட்ட நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்ற அரசு தரப்பின் வாதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பரிசீலித்தனர். இதையடுத்து, ரமேஷ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
  • ஆபரேஷன் சிந்தூர் பின்னணி குறித்து முதன்முறையாக விரிவாக பேசிய அஜித் தோவல்
  • 24 பெட்டிகளுடன் புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு விரைவில் தொடக்கம்: ஐசிஎஃப்
  • தமிழகத்தில் ரூ.507 கோடியில் 10,185 கால்வாய்கள், 809 நீர்நிலைகள் சீரமைப்பு இன்று தொடக்கம்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
  • வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
Amit Shah’s speech in Puducherry

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்

ஆகஸ்ட் 17, 2026
Gold worth ₹2 crore seized on a Chennai train.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

ஆகஸ்ட் 17, 2026
CBI has commenced the investigation into the Armstrong murder case.

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp