திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்; விருதுகள் வழங்குகிறார்

athibantv by athibantv
ஆகஸ்ட் 15, 2026
in Tamilnadu, Latest-news-tamil
A A
0
Chief Minister Vijay Inspects Chennai Metro Rail
📢 WhatsApp Channel Join
👁️ 1.4K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்; விருதுகள் வழங்குகிறார்

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 15) முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு விருதுகளையும் அவர் வழங்க உள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், கடந்த மே 10-ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற பின்னர், ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 80-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மேலும், தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளையும் அவர் வழங்குகிறார்.

விழாவுக்கு முன்னதாக காலை 8.30 மணியளவில் கோட்டை கொத்தளம் அருகே முதல்வர் விஜய் வருகை தருகிறார். அவரை தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வரவேற்று, அங்கு பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னர் காவல்துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பார்வையிடுகிறார்.

இதைத்தொடர்ந்து காலை 8.45 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் குடும்பத்தினர், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில் தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்லாளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய மருத்துவர், நிறுவனம் மற்றும் சமூக சேவகர், கூட்டுறவு வங்கி, சமூகநல சேவை உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தலைநகர் சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்திலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், சுதந்திர தின விழா நிறைவடையும் வரை காமராஜர் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தகைசால் தமிழர் விருது’ எம்.கிருஷ்ணசாமிக்கு?

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.கிருஷ்ணசாமிக்கு இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் இந்த விருதை வழங்குவார் என கூறப்படுகிறது.

எம்.கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் எம்.பி.யாகவும், மகள் சவுமியா அன்புமணி பாமக எம்.எல்.ஏ.வாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களை முன்னிட்டு, ஆளுநர் சார்பில் ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வழங்கும் தேநீர் விருந்தில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருப்பதுடன் கேரள ஆளுநராகவும் ஆர்.வி.அர்லேகர் செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் இன்று கேரளாவுக்கு செல்ல உள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் சுதந்திர தின தேநீர் விருந்து நடைபெறாது என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: TamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp