திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

“எதற்கும் கவலைப்பட வேண்டாம்; நான் உங்களுடன் இருக்கிறேன்” – எம்.பி.க்களுக்கு மோடி உறுதி

athibantv by athibantv
ஆகஸ்ட் 8, 2026
in Political, India, Latest-news-tamil
A A
0
PM Modi assures MPs from other parties supporting the BJP.
📢 WhatsApp Channel Join
👁️ 660 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

“எதற்கும் கவலைப்பட வேண்டாம்; நான் உங்களுடன் இருக்கிறேன்” – எம்.பி.க்களுக்கு மோடி உறுதி

பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும், தான் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காலை நேர சிற்றுண்டி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி.க்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி அளித்த விருந்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள், சிவசேனா (உத்தவ்) பிரிவில் இருந்து விலகிய 7 எம்.பி.க்கள், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் உள்ளிட்ட 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் வரலாற்றை படித்து, அதன் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற விவாதங்களில் அனைத்து உறுப்பினர்களும் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் உன்னதமான ஆலயம் எனக் குறிப்பிட்ட பிரதமர், அவையில் தொடர்ந்து நடைபெறும் அமளி காரணமாக புதிய எம்.பி.க்களுக்கு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தமக்குத் தெரியவந்துள்ளதாக கூறினார். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமீபகாலமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் தனக்கு கவலை அளிப்பதாக தெரிவித்த பிரதமர், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்களை உறுப்பினர்கள் படித்து, விவாதங்களின்போது அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும், ஒவ்வொரு எம்.பி.யும் தாங்கள் சார்ந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் என்றும், மாநிலங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு குடும்பம் போன்றது எனக் கூறிய பிரதமர், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார். கூட்டணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் மதிப்பும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தான் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஆதரவாக இல்லாமல், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தான் உறுதுணையாக இருப்பேன் என்றும், யாரும் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் மற்றும் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்.பி.க்கள் சிலரையும் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களிடம், “நான் உங்களுடன் இருக்கிறேன்; எதற்கும் கவலைப்பட வேண்டாம்” என பிரதமர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: IndiaModiPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp