தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
ஆட்சியின் அலங்கோலங்களைக் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று தவெக அரசு எண்ணினால், மக்கள் அந்த ஆணவத்திற்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே, முதல்வர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததற்காகக் குறைந்தது 10 பேர் காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசியல் தலைவர்கள் தங்கள் நற்பெயரைப் பாதுகாக்கக் குற்றவியல் சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு அபாயம் என்றும், விமர்சனங்களை அவதூறுகளாகக் கருதி அரசு அவசரம் காட்டுவது வேதனை என்றும் அச்செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இதை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், பத்திரிகையின் இக்கட்டுரை முதல்வரின் தலையில் நங்கு நங்கென்று குட்டியுள்ளதாகவும், விமர்சனங்களை அடக்கப் பார்க்கும் தவெக அரசின் போக்கைச் சாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



