பள்ளிக்கரணையில் போதை மாத்திரைகள் பறிமுதல்: மேற்கு வங்க இளைஞர் கைது
சென்னை பள்ளிக்கரணையில் விற்பனைக்காக போதைப் பொருட்களை வைத்திருந்ததாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பள்ளிக்கரணை போலீஸார் நேற்று முன்தினம் ரேடியல் சாலை குப்பைக் கிடங்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபு மேடே (31) என்பதும், போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அவற்றை கொண்டு வந்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் பாபு மேடே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி அவரை போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காவலில் எடுத்தனர்.




