திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 17, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Minister Nirmal Kumarrt
📢 WhatsApp Channel Join
👁️ 4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என்றும், இந்தச் சம்பவத்தை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும், மாணவர் அமுதன் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், 100 நாள் சாதனை எனக் கூறும் தவெக அரசு, இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், போதைப்பொருளுக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related posts

Bribery

லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026

கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கோஷ்டி மோதல் என அமைச்சர் கூறுவது சரியல்ல என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்ததால்தான் மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறுவதாகவும், எனவே இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். கோவை சம்பவத்தில் மைதானத்திலேயே வைத்து மாணவர் அமுதனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்து பேசுகையில், கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு உண்மை நிலவரத்துக்கு மாறாக சித்தரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம் என்றும், எனவே இந்தச் சம்பவத்தை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

அமுதன் கொலை தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வழக்கில் 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
Minister Nirmal Kumarrt

கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bribery

லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp