திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

எம்எல்ஏக்கள் பேச 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு

athibantv by athibantv
ஆகஸ்ட் 13, 2026
in Tamilnadu, Latest-news-tamil, Political
A A
0
Legislative Assembly tamilnadu
📢 WhatsApp Channel Join
👁️ 885 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

எம்எல்ஏக்கள் பேச 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதற்கான நேரத்தை முறைப்படுத்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். புதிய உறுப்பினர்கள் தங்களது தொகுதி பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக முதல் கூட்டத்தொடரில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விவாதங்களில் குறுக்கீடுகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட பேரவைத் தலைவர், உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளைத் தவிர்த்து, பேரவைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். பேரவை நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்காகவே பேசும் நேரம் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் அமைச்சர் வினோத் பேசும்போது, சூரியனை குறிப்பிட்டு திமுகவை மறைமுகமாக விமர்சித்தார். அதற்கு திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், இதுவரை யாராலும் நெருங்க முடியாத நிலையில் சூரியன் இருப்பதாகவும், பல்வேறு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டபோதிலும் சூரியனை நோக்கி ராக்கெட் செலுத்த முடியவில்லை என்றும் கூறினார்.

அதிமுக எம்எல்ஏ ஒ.எஸ். மணியன் பேசும்போது, வடகிழக்கு மாநிலங்களில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இயற்கை விவசாயம் பெயரளவிலேயே இருப்பதாக தெரிவித்தார். மேலும், வேளாண் பட்ஜெட்டில் ஏக்கருக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு விவசாயிக்கு எத்தனை ஏக்கர் நிலத்துக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் பல்கலைக்கழகத்தில் 450-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருப்பதாக தெரிவித்தார். அந்த பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், பல்வேறு பேராசிரியர் பணிகளுக்கான பதவி உயர்வுகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விசிக உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், பல்வேறு எம்எல்ஏக்களின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், மக்கள் பணியை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாகன வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க உறுப்பினர்களின் நலனையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் தமக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். அந்த கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர், ஆகஸ்ட் 17-ம் தேதி சட்டப்பேரவையில் அந்த விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp