தமிழக அரசு கும்பகர்ணனைப் போல் தூங்காமல் விழிப்புடன் செயல்பட்டு, டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ளத் தேவையான காவிரி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், குறுவை சாகுபடி செய்து தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு தவறியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு அந்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இந்த அரசு ‘ரீல்ஸ்’ மோகத்தில் மூழ்கியிருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீரை தமிழக அரசு உரிய முறையில் கேட்டுப் பெறவில்லை என்றும், இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 5.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலத்தடி நீரை நம்பி 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். அதற்கும் போதுமான அளவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு கருகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடன் பெற்றிருந்தாலும், அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய நடைமுறையில் குறைந்த கடன் தொகையைப் பெற்ற ஒருவருக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையாவது உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, விவசாயிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும், மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும், டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசு விரைவாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “கும்பகர்ணனைப் போல் தூங்காமல் தவெக அரசு விழிப்புடன் இருந்து, விவசாயிகளுக்குத் தேவையான சம்பா சாகுபடி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டும்” என்றார்.
இதுதவிர, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். மேலும், வறட்சி நிலவும் தற்போதைய சூழலில் ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சம்பா சாகுபடிக்கு கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழக அரசு கும்பகர்ணனைப் போல் தூங்காமல் விழிப்புடன் செயல்பட்டு, டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ளத் தேவையான காவிரி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி முழுமையான பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், குறுவை சாகுபடி செய்து தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு தவறியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு அந்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இந்த அரசு ‘ரீல்ஸ்’ மோகத்தில் மூழ்கியிருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீரை தமிழக அரசு உரிய முறையில் கேட்டுப் பெறவில்லை என்றும், இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 5.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலத்தடி நீரை நம்பி 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். அதற்கும் போதுமான அளவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு கருகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடன் பெற்றிருந்தாலும், அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய நடைமுறையில் குறைந்த கடன் தொகையைப் பெற்ற ஒருவருக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையாவது உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, விவசாயிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும், மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும், டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசு விரைவாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “கும்பகர்ணனைப் போல் தூங்காமல் தவெக அரசு விழிப்புடன் இருந்து, விவசாயிகளுக்குத் தேவையான சம்பா சாகுபடி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டும்” என்றார்.
இதுதவிர, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். மேலும், வறட்சி நிலவும் தற்போதைய சூழலில் ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



