விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (ஆக.14) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேகேதாட்டு விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுவதாகவும், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தவெக அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று காலை 9.30 மணியளவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை வகித்து உரையாற்ற உள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுடன், மேகேதாட்டு பிரச்சினையில் தமிழகத்தின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட உள்ளது. மேலும், காவிரி நீரில் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கைப் பெற நடவடிக்கை எடுக்காத அரசுக்கு எதிராகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட உள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அக்கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல அதிமுக திட்டமிட்டுள்ளது.



