திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக ரூ.8 கோடி பேரம்: போலி இ-மெயில் மோசடியில் 2 பேர் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 12, 2026
in Political, Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Two arrested over an ₹8 crore deal promising a ministerial post.
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக ரூ.8 கோடி பேரம்: போலி இ-மெயில் மோசடியில் 2 பேர் கைது

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெயரில் போலி இ-மெயில் கணக்கை உருவாக்கி, அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.8 கோடி பேரம் பேசியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லிவாக்கம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த மோசடி முயற்சி வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு கணினி சிபியு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக நிஸ்வாக் என்பவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அமைச்சர் பெயரில் வெங்கடேஷ் என்பவர் போலியான இ-மெயில் கணக்கை உருவாக்கியதுடன், ஆள்மாறாட்டம் செய்து போலியான மின்னணு ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

Related posts

Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

விசாரணையில், வேலூரைச் சேர்ந்த ரூபன் ராஜ் (27), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் (21) ஆகியோர் கடந்த ஜூலை மாதம் வெங்கடேஷுக்கு தெரிந்த தயாளன் என்பவரை அணுகியதாக தெரியவந்தது. தங்களுக்கு அமைச்சரை நன்கு தெரியும் என்றும், ரூ.8 கோடி வழங்கினால் வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஒருவருக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தர முடியும் என்றும் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தகவலை நம்பிய தயாளன், வெங்கடேஷ் மூலமாக சம்பந்தப்பட்ட தகவலை எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ரூபன் ராஜ் தனது மடிக்கணினியைப் பயன்படுத்தி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலியான இ-மெயில் கணக்கை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அந்த இ-மெயிலில் இருந்து உறுதிப்படுத்தல் வந்ததாகக் காட்டும் வகையில் செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அதனை வெங்கடேஷ் மூலம் வாட்ஸ்-அப்பில் அனுப்பி நம்ப வைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களுடன் எம்.எல்.ஏ. குழு வீடியோ அழைப்பில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலி இ-மெயில் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் பணம் பறிக்க முயன்றதாக சந்தேகம் உறுதியானது.

இதையடுத்து வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ரூபன் ராஜ் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு கணினி சிபியு கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பேரம் பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimePoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp