திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 13, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Coimbatore student beaten to death – What do the police and college administration say
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மலுமிச்சம்பட்டியில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரே இன்று (ஆக.13) கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குவேந்தல் பகுதியைச் சேர்ந்த கென்னடி – சுமதி தம்பதியரின் மகன் அமுதன் (19). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமனும் கல்லூரி அருகே வந்தபோது, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் இருவரையும் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அமுதன், அன்றைய தினம் மதியம் விடுதியில் இருந்தபோது உயிரிழந்தார்.

Related posts

Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் செட்டிபாளையம் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சக மாணவர்கள் தாக்கியதில் அமுதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து செட்டிபாளையம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்த வழக்கில் கடலூரைச் சேர்ந்த ஆராமுதன் (20), மானாமதுரையைச் சேர்ந்த அரவிந்த் (21), நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவரோகித் (20), குன்னம் பகுதியைச் சேர்ந்த மணிபாலு (20) மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீஸார் நேற்று (ஆக.12) கைது செய்தனர். மேலும் சில மாணவர்களுக்கும் சம்பவத்தில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததால், அவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மாணவர் சந்தோஷ் (20) என்பவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவித்ததன் காரணமாகவே மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து அமுதனை தாக்கிக் கொன்றதாக அவரது பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், போலீஸார் தரப்பில் வேறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி கோஷ்டி மோதல்கள் நடைபெற்று வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ம் தேதி அமுதன் உள்ளிட்ட 6 பேர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்த மாணவர் தீபக்கின் அறைக்குச் சென்று அங்கிருந்தவர்களை தாக்கி செல்போனை பறித்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர். இதையடுத்து அதே நாளில் எதிர்தரப்பினர் நடத்திய தாக்குதலில் அமுதன் உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புகளுக்குச் சென்று வந்த அமுதன், கடந்த ஜூலை 11-ம் தேதி விடுதி சமையலரை தாக்கியதாக கூறப்பட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில மாணவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
  • அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனை; மீண்டும் பதற்றம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தல்
  • 80-வது சுதந்திர தின விழாவில் தனித்துவமான தலைப்பாகையுடன் பிரதமர் மோடி; 13-வது உரை
Possibility of heavy rain

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 16, 2026
Arrest 56789

சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

ஆகஸ்ட் 16, 2026
Manickam Tagore 25

காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 16, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp