திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

ஆழ்வார்திருநகரி தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

athibantv by athibantv
ஆகஸ்ட் 13, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Tuticorin Court Verdict
📢 WhatsApp Channel Join
👁️ 4.7K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

ஆழ்வார்திருநகரி தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் 5 பேருக்கும் தலா ரூ.7,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த பிச்சையின் மகன் மாரிமுத்து (33). தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜின் தம்பியான ஏசுராஜாவை அன்றாட வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சம்பள பாக்கி தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது.

Related posts

Annamalai 28 07 2026

டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Atal Bihari Vajpayee’s death anniversary ​​President Droupadi Murmu and Prime Minister Modi pay tribute.

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி

ஆகஸ்ட் 17, 2026

இந்த தகராறு காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாரிமுத்துவும், அவரது உறவினர்களும் சேர்ந்து ஏசுராஜாவையும், அவரது அண்ணன் அந்தோணிராஜையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்தோணிராஜ், மரியசிலுவை மற்றும் அவர்களது உறவினர்கள் இணைந்து மாரிமுத்துவின் வீட்டை அடித்து உடைத்து, அங்கிருந்த பொருட்களை திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் ஆழ்வார்திருநகரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான முன்விரோதம் தொடர்ந்து நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாரிமுத்து தனது மனைவியுடன் தனது தந்தை பிச்சையின் வீட்டுக்குச் சென்றுவிட்டு நவலட்சுமிபுரம் நடுத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவலட்சுமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சந்தியப்பன் (50), அவரது மகன் அந்தோணிராஜ் (30), வாய்க்கால்கரை தெருவைச் சேர்ந்த நிக்கோலஸின் மகன் மரியசிலுவை (54), அவரது மகன்கள் அருள்ராஜ் (31), ஞானசேகர் (29), குணசிங் (26) ஆகிய 6 பேரும் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்ததாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மரியசிலுவை உயிரிழந்தார். இதையடுத்து மீதமுள்ள 5 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம்சாட்டப்பட்ட அருள்ராஜ், அந்தோணிராஜ், ஞானசேகர், குணசிங் மற்றும் சந்தியப்பன் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7,500 அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
  • வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
  • முதல்வர் விஜய் மற்றும் குடும்பம் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம்
  • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஆக.18-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
  • காவிரி நீரைத் தடுக்க பாஜக பதற்றத்தை ஏற்படுத்துகிறது: மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்தி தலா ரூ.1 கோடி வழங்குக என அன்புமணி வலியுறுத்தல்
  • நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வரும்: துரைமுருகன்
  • டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: தமிழக அமைச்சர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சனம்
  • காவிரி முதல் மேகேதாட்டு வரை தினமும் போராட்டமே; இதுவே வாழ்க்கையாகிவிட்டது என சீமான்
Annamalai 28 07 2026

டெண்டர் ஊழல் குறித்து ஆடியோ ஆதாரம் உள்ளது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Atal Bihari Vajpayee’s death anniversary ​​President Droupadi Murmu and Prime Minister Modi pay tribute.

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி

ஆகஸ்ட் 17, 2026
Nainar Nagendran’s criticism

முதல்வர் விஜய் மற்றும் குடும்பம் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp