திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

அனந்தபுரி ரயிலில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை

athibantv by athibantv
ஜூலை 26, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Diamond jewellery worth Rs 75 lakh stolen on train
📢 WhatsApp Channel Join
👁️ 1.5K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

அனந்தபுரி ரயிலில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை

சென்னையைச் சேர்ந்த தனியார் நகை நிறுவன மேலாளர் ஒருவர் பயணித்த ரயிலில் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அருகே நகைகள் இருந்த பை காணாமல் போன நிலையில், ரயில்வே போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வேப்பேரியைச் சேர்ந்த தீபக் சேன்ஷெட்டி (47), தனியார் நகை நிறுவனத்தின் சென்னை கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்களிடம் மாதிரி நகைகளை காட்சிப்படுத்தி ஆர்டர்கள் பெறும் பணிக்காக, ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகளுடன் கடந்த 22-ஆம் தேதி வந்தே பாரத் ரயிலில் மதுரைக்கு சென்றிருந்தார்.

Related posts

Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026

பணியை முடித்துவிட்டு, 23-ஆம் தேதி இரவு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பியபோது, தனது செல்போன், ஆப்பிள் வாட்ச் மற்றும் தங்க மோதிரத்தையும் நகைகள் இருந்த பைக்குள் வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை விழித்தபோது, நகைகள் அடங்கிய அந்தப் பை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, ஆப்பிள் வாட்சின் இருப்பிடத்தை அதன் செயலி மூலம் கண்காணித்தபோது, ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே பை கிடப்பது கண்டறியப்பட்டது. போலீஸார் அங்கு சென்று பையை மீட்டபோது, அதில் ஆப்பிள் வாட்ச் மட்டும் இருந்ததாகவும், ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருடப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் பயணித்தவர்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் நகைகளை திருடியவர்களை கண்டறியும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Two-Day Extension to Apply for MBBS and BDS Courses

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp