“டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைப்பு!” – மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு
மதுரை:
மின்சாரத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் ஊழல் தொடர்பான விசாரணை, மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) வசம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்மையில் மின்னல் தாக்கி உயிரிழந்த மூன்று பெண்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதிக்கான காசோலைகளை அவர்களிடம் வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், “மின்சாரத்துறையில் எங்கெல்லாம் முறைகேடுகளும் ஊழல்களும் நடக்கிறதோ, அங்கெல்லாம் தட்டாராமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது மின் துறையில் கணக்கீட்டாளர்கள் (Assessors) பணிக்கு 7,000 பணியாளர்கள் தேவைப்படும் சூழலில், வெறும் 1,500 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; இந்த காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்றார். மேலும், தனிப்பட்ட சிலரின் தலையீடுகளால் ஏற்பட்ட மின்தடைகள் கடந்த சில நாட்களாகக் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய 7 சிறப்புப் பாதுகாப்புக் குழுக்கள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருப்பது அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.




