நம்பிக்கை வாக்கெடுப்பு எதிரொலி: பனையூர் அலுவலகத்தில் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன், ஆட்சிக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை இன்று நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும், உறுப்பினர்களின் ஆதரவை முழுமையாக உறுதி செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைப்பதற்கான இறுதிக்கட்ட உத்திகள் குறித்து முதலமைச்சர் விஜய் தனது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.




