திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

திண்டிவனம்: பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவம் – 5 பேர் மீது வழக்கு

athibantv by athibantv
செப்டம்பர் 4, 2025
in Tamilnadu
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

திண்டிவனம்: பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவம் – 5 பேர் மீது வழக்கு

திண்டிவனம் நகராட்சியில், இளநிலை உதவியாளர் ஒருவரை பெண் கவுன்சிலரின் காலில் விழ வைக்கப்பட்ட சம்பவத்தில், நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேருக்கு எதிராக வன்கொடுமை குற்றப்பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நத்தைமேடு, விஎம்எஸ் நகரைச் சேர்ந்த மரூர் ராஜா, குண்டர் சட்டத்தில் கைதாகியிருந்த சராயக் கடத்தல் குற்றவாளி. இவர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர். இவரது மனைவி ரம்யா திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

ஆகஸ்ட் 29-ம் தேதி, கவுன்சிலர் ரம்யா நகராட்சி அலுவலகம் சென்றபோது, தெருவிளக்கு தொடர்பான கோப்புகளைத் தேடிக் கொண்டிருந்த இளநிலை உதவியாளர் முனியப்பனிடம், தனக்குத் தேவையான பதிவு புத்தகத்தை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

பின்னர், புகார் அளிக்க ஆணையர் அறையில் காத்திருந்த ரம்யா அருகே நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களும் இருந்தனர். அப்போது, நகர்மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் வந்தபோது, அவரது உத்தரவின் பேரில், முனியப்பன் கவுன்சிலரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், வாய்வழி மன்னிப்பு போதாது என வலியுறுத்தப்பட்டதால், முனியப்பன் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து, நகராட்சி மேலாளர் நெடுமாறனிடம் அனைத்து கட்சி கவுன்சிலர்களின் சார்பில் ஜனார்த்தன் மனு அளித்து, சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரினார். அதேசமயம், இளநிலை உதவியாளர் கவுன்சிலரின் காலில் விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பட்டியலினத்தைச் சேர்ந்த ஊழியரை காலில் விழ வைத்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினர்.

இதற்கிடையில், முனியப்பனின் புகாரின் பேரில், கவுன்சிலர் ரம்யா, அவரது கணவர் ராஜா, நகர்மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன், திமுக பிரமுகர்கள் காமராஜ், பிர்லா செல்வம் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கவுன்சிலர் விளக்கம்:

இதுகுறித்து டிஎஸ்பி பிரகாஷிடம் அளித்த புகாரில் கவுன்சிலர் ரம்யா தெரிவித்ததாவது:

“கோப்புகளை தேடும் பணிக்காக உதவியாளரை உடன் வைத்துக்கொள்ளச் சொன்னபோது, முனியப்பன் எனக்குத் தவறான முறையில் பேசியார். இதுகுறித்து ஆணையர் சரவணனிடம் மனு அளிக்க காத்திருந்தேன். அப்போது, முனியப்பன் திடீரென எனது காலில் விழுந்தது போல நடந்து, வலது கையால் என் காலைத் தொட்டார்; இடது கையால் உடலைத் தொட்டார். உடனே நான் நாற்காலியைத் தள்ளி விலகினேன். பெண்மைக்கு அவமானம் உண்டாக்கிய முனியப்பன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp