ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என புதுச்சேரி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. மாணவர்கள் தொடர்பான விவகாரங்களில் குரல் கொடுப்பதாக கூறும் ராகுல் காந்தி, இந்தச் சம்பவத்திலும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்று ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலுக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தபோது மத்திய பாஜக அரசு அந்தத் தேர்வை ரத்து செய்து மறுதேர்வுக்கு உத்தரவிட்டதாக வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார். மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். அந்தப் போராட்டங்களுக்கு குரல் கொடுத்த ராகுல் காந்தி, தற்போது ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் நடத்திய விவகாரத்தில் மட்டும் மவுனமாக இருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
மாணவர்களின் நலனுக்காக பாடுபடுவதாக கூறும் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தனது நிலைப்பாடு குறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் வி.பி.ராமலிங்கம் வலியுறுத்தினார். ராகுல் காந்தி சுயலாப அரசியலை மட்டுமே முன்னெடுக்க விரும்புவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதாகவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் வி.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார். இந்த விவகாரங்களில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மட்டுமின்றி புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களும் மக்களிடம் தவறான தகவல்களை தெரிவிப்பதாக அவர் கூறினார்.
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு அதனை செம்மைப்படுத்தியதாகவும் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வெளிநாட்டு நிதி எந்த நோக்கத்துக்காக பெறப்படுகிறது என்பதையும், அது முறையாக பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மோடியின் ஆட்சியைப் பற்றியும் வி.பி.ராமலிங்கம் கருத்து தெரிவித்தார். கடந்த 13 ஆண்டுகளாக மத்தியில் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியாவை 4-வது இடத்துக்கு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என அவர் குறிப்பிட்டார்.
மேலும், வளைகுடா போரின் தாக்கத்தால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார். உலக நாடுகளிடையே இணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் அமைதியை விரும்பும் தலைவராக பிரதமர் மோடி அறியப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் குறித்து மவுனம் ஏன்? ராகுல் காந்திக்கு புதுச்சேரி பாஜக கேள்வி
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என புதுச்சேரி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. மாணவர்கள் தொடர்பான விவகாரங்களில் குரல் கொடுப்பதாக கூறும் ராகுல் காந்தி, இந்தச் சம்பவத்திலும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்று ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலுக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தபோது மத்திய பாஜக அரசு அந்தத் தேர்வை ரத்து செய்து மறுதேர்வுக்கு உத்தரவிட்டதாக வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார். மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். அந்தப் போராட்டங்களுக்கு குரல் கொடுத்த ராகுல் காந்தி, தற்போது ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் நடத்திய விவகாரத்தில் மட்டும் மவுனமாக இருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
மாணவர்களின் நலனுக்காக பாடுபடுவதாக கூறும் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தனது நிலைப்பாடு குறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் வி.பி.ராமலிங்கம் வலியுறுத்தினார். ராகுல் காந்தி சுயலாப அரசியலை மட்டுமே முன்னெடுக்க விரும்புவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதாகவும், இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் வி.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார். இந்த விவகாரங்களில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மட்டுமின்றி புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களும் மக்களிடம் தவறான தகவல்களை தெரிவிப்பதாக அவர் கூறினார்.
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு அதனை செம்மைப்படுத்தியதாகவும் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வெளிநாட்டு நிதி எந்த நோக்கத்துக்காக பெறப்படுகிறது என்பதையும், அது முறையாக பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மோடியின் ஆட்சியைப் பற்றியும் வி.பி.ராமலிங்கம் கருத்து தெரிவித்தார். கடந்த 13 ஆண்டுகளாக மத்தியில் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியாவை 4-வது இடத்துக்கு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என அவர் குறிப்பிட்டார்.
மேலும், வளைகுடா போரின் தாக்கத்தால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார். உலக நாடுகளிடையே இணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் அமைதியை விரும்பும் தலைவராக பிரதமர் மோடி அறியப்படுவதாகவும் அவர் கூறினார்.



