திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

இ20 பெட்ரோல் விவகாரம்: எதிர்ப்பாளர்களை விமர்சித்த பாஜக எம்.பி. கருத்தால் புதிய சர்ச்சை

athibantv by athibantv
ஆகஸ்ட் 10, 2026
in Political, India, Latest-news-tamil
A A
0
E20 petrol issue Controversy over BJP MP’s remarks
📢 WhatsApp Channel Join
👁️ 385 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

இ20 பெட்ரோல் விவகாரம்: எதிர்ப்பாளர்களை விமர்சித்த பாஜக எம்.பி. கருத்தால் புதிய சர்ச்சை

பெட்ரோலில் எத்தனாலை கலந்து விற்பனை செய்யும் மத்திய அரசின் இ20 பெட்ரோல் கொள்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இ20 பெட்ரோல் பாதுகாப்பானது என்றும், இதனை பயன்படுத்துவதால் பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இ20 பெட்ரோல் தொடர்பாக பேசிய ஜனார்த்தன் மிஸ்ரா, நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டார். சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெயை சரக்கு கப்பல்கள் மூலம் கொண்டு வருவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சில நேரங்களில் பாதுகாப்பான கடல் வழித்தடத்தைத் தேர்வு செய்வதற்காக கூடுதலாக 18,000 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

இந்த சூழ்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலக்கும் கொள்கையை முன்னெடுத்ததாக ஜனார்த்தன் மிஸ்ரா கூறினார். இந்தக் கொள்கைக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருவதாகவும், ‘இ20 பெட்ரோல் வேண்டாம்’, ‘தூய பெட்ரோல் வேண்டும்’ என சிலர் இயக்கங்களை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வாகனங்களுக்கு தூய பெட்ரோல் மட்டுமே பொருத்தமானது என எதிர்ப்பாளர்கள் கூறுவதாக குறிப்பிட்ட ஜனார்த்தன் மிஸ்ரா, இதுதொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். நாட்டில் தூய பெட்ரோல் எங்கும் கிடைக்கிறதா என்றும், அவ்வாறு இருக்கும் நிலையில் தூய பெட்ரோல் எங்கிருந்து கிடைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எத்தனால் எரிபொருளை பிரேசில் வெற்றிகரமாக பயன்படுத்தி வருவதாகவும், எத்தனால் கலந்த பெட்ரோலை வாகனங்களில் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என இந்திய வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் ஜனார்த்தன் மிஸ்ரா கூறினார். எனவே, இ20 பெட்ரோல் கொள்கையை எதிர்ப்பது தேவையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இ20 பெட்ரோல் என்றால் என்ன?

பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலந்து வாகன எரிபொருளாக பயன்படுத்தப்படுவது இ20 பெட்ரோல் எனப்படுகிறது. இதன் மூலம் மாசு குறைவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையை கட்டுப்படுத்த முடியும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அந்நியச் செலாவணியை சேமிக்கவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும் இது உதவும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது 2014-ம் ஆண்டு 1.4 சதவீத எத்தனால் கலவையுடன் தொடங்கியது. பின்னர் 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்துவதற்கு 2022 நவம்பர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே அந்த இலக்கு எட்டப்பட்டது.

அடுத்த கட்டமாக 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை 2030-ம் ஆண்டில் அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த இலக்குக்கு முன்னதாகவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் இ20 பெட்ரோல் விற்பனை தொடங்கியது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp