திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

athibantv by athibantv
ஜூலை 30, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Interrogation of Senthil Balaji enters second day.
📢 WhatsApp Channel Join
👁️ 3.4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார் உரிமங்களுக்கான டெண்டர் நடைமுறைகள், சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டது மற்றும் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கடந்த ஜூலை 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

இந்த வழக்கில் முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும், தற்போதைய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் ஐஏஎஸ், முன்னாள் மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கில், டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்திருந்த போதிலும், பார் டெண்டர் உள்ளிட்ட நடவடிக்கைகளில் குறைவான வருவாய் கிடைத்ததாக கணக்குகள் காட்டப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்ட நிலையில், அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து முன்பண தொகையை செலுத்தியதாகவும், இதன் மூலம் கூட்டு சதி நடைபெற்றிருக்கலாம் எனவும் விசாரணை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 857 டாஸ்மாக் பார்களில் 284 பார்கள் மூடப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை உரிய உரிமம் இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டதாகவும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டாஸ்மாக் கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் மற்றும் பழைய மதுபான பாட்டில்கள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும், டாஸ்மாக் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அவரை தொடர்புபடுத்த முடியாது என்றும் வாதிட்டார்.

மேலும், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆரம்ப கட்ட விசாரணையில் குறைந்தது ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாகவும், முழுமையான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

இதனை தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், தற்போதைய சூழலில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், முறைகேடு மற்றும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp