திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

கரூர் அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்; கத்தியால் குத்தியதில் தாய் பலி, மகள் படுகாயம்

athibantv by athibantv
ஜூலை 30, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Two students hacked with a sickle near Central Metro.
📢 WhatsApp Channel Join
👁️ 4.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கரூர் அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்; கத்தியால் குத்தியதில் தாய் பலி, மகள் படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாய் மற்றும் மகள் மீது மர்ம நபர்கள் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே உள்ள எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமியின் மனைவி பாப்பம்மாள் (65), அவரது மகள் மஞ்சுளா (42) ஆகியோர் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் மஞ்சுளா காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த நங்கவரம் போலீஸார் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த மஞ்சுளாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த பாப்பம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டதுடன், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையில், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட பாப்பம்மாளின் பேத்தி சம்பவம் நடந்த இரவு அவரது வீட்டிற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், அவரை தேடி கோவை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp