திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

குழந்தை பிறந்தது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சம்; பச்சிளம் குழந்தையை கொன்றதாக இளம்பெண் வாக்குமூலம்

athibantv by athibantv
ஜூலை 30, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Arrest
📢 WhatsApp Channel Join
👁️ 2.4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

திருமணமாகாமல் குழந்தை பிறந்தது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சம்; பச்சிளம் குழந்தையை கொன்றதாக இளம்பெண் வாக்குமூலம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் குப்பைத்தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண், திருமணமாகாமல் குழந்தை பிறந்தது வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 28-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகேயுள்ள குப்பைத்தொட்டியில், சாக்குப் பையில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்ப்பாக்கம் போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

Related posts

Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026

விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், அருகிலுள்ள வீட்டில் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்த பிரியங்கா (22) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக தனது சொந்த ஊரைச் சேர்ந்த இளைஞருடன் காதல் உறவில் இருந்ததாகவும், கடந்த ஆண்டு அக்டோபரில் கர்ப்பமானதை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த மாதம் 27-ஆம் தேதி நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டதால், அவர் வேலை பார்த்து வந்த வீட்டின் கழிப்பறையிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். குழந்தை அழுததால் அது வெளியில் கேட்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், குழந்தையின் வாய் மற்றும் மூக்கை கையால் அழுத்தியதாகவும், இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சில நண்பர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்ட பின்னர், குழந்தையின் உடலை பிளாஸ்டிக் அரிசி மூட்டையில் வைத்து அதிகாலையில் அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசியதாகவும், திருமணமாகாமல் குழந்தை பெற்றது வெளியில் தெரிந்துவிடும் என்ற பயமே இந்தச் செயலுக்குக் காரணம் எனவும் பிரியங்கா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரியங்காவை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்துக்குப் பிறகு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் பதில் அளிக்கவில்லை என உதயநிதி குற்றச்சாட்டு
  • நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்வு
  • கல்லூரி மாணவர் அமுதன் கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
Vice President C.P. Radhakrishnan

தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஆகஸ்ட் 17, 2026
Manickam Tagore

தேர்வு குளறுபடிகளால் மாணவர்கள் பாதிப்பு: மோடி அரசை மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடல்

ஆகஸ்ட் 17, 2026
Rahul Gandhi

சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp