டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!
புதுடெல்லி:
தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் சாலை மேம்பாடு குறித்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் பதிவிடுகையில், “மத்திய அமைச்சர் நிதின் கட்காரியைச் சந்தித்து, தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் சாலை பாதுகாப்புக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழக உள்கட்டமைப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு சார்ந்த இந்த சந்திப்பு தற்போது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.





