கரூரில் 41 பேர் உயிரிழப்பு: தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

Date:

கரூரில் 41 பேர் உயிரிழப்பு: தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

கரூரில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்த முதல்தகவல் அறிக்கையில் தவெக நிர்வாகிகள், பொதுச் செயலாளர் என். ஆனந்த், மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன், இணைச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரிக்கிறது. கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீசார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு ஆவணங்களை ஒப்படைத்தது.

இதையடுத்து, சிபிஐ ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்டின் முன்னிலையில், 22-ம் தேதி முதல்தகவல் அறிக்கையை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆர் நகல்க்காக தவெக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அதன்பின், சிபிஐ நகல் வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல் – வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை கண்காணிக்க உத்தரவு

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல் – வாக்காளர் பட்டியல் திருத்தப்...

‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?

‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? கரூர்...

ரஞ்சி கோப்பையில் 5 விக்கெட்டுகள் பறித்த ஷமி – குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி!

ரஞ்சி கோப்பையில் 5 விக்கெட்டுகள் பறித்த ஷமி – குஜராத்தை 141...

போஸ் வெங்கட் இயக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் டிராமா – இசையில் யுவன் ஷங்கர் ராஜா!

போஸ் வெங்கட் இயக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் டிராமா – இசையில் யுவன்...