திருப்பூர் புறநகரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் கல்வீச்சு – எஸ்டிபிஐயை சேர்ந்த மேலும் இருவர் கைது

Date:

திருப்பூர் புறநகரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் கல்வீச்சு – எஸ்டிபிஐயை சேர்ந்த மேலும் இருவர் கைது

திருப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வழக்கில், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த மேலும் இரண்டு பேரை போலீசார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.

ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி பிரபு என்பவரது இல்லத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆரம்ப கட்டத்தில் இருவரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட மேலும் இருவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நீண்ட காலமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருப்பூர் எஸ்டிபிஐ மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சாதிக் மற்றும் தாஜுதீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி ஆகும் சூழல்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி ஆகும்...

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – திமுக அரசுக்கு அண்ணாமலை...

மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் பண முறைகேடு – ஆளும் கட்சி நிர்வாகிகள் மீது புகார்

மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் பண முறைகேடு – ஆளும் கட்சி...

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – துணைத் தேர்தல் ஆணையர் தமிழகத்திற்கு வருகை

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – துணைத் தேர்தல் ஆணையர்...