இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள இருகூர் – போத்தனூர் இடையிலான 10.77 கிலோமீட்டர் நீள ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றும் திட்டத்திற்கு ரயில்வே துறை அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்கிய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைக் பாராளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.