இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் பயணித்த இந்தியக் கப்பல்களைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், இந்தியர்கள் உள்ளிட்ட பல மாலுமிகள் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியக் கப்பல்கள் மீதான ஈரானின் இந்தத் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், உண்மையைத் திரித்து வெளியிடும் ஈரானிடம் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மனப்பான்மை இல்லை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், ஈரான் தனது இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளை உடனடியாகச் சீர்செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.





