இஸ்லாமிய மதவெறி அமைப்புக்கள் தங்களது சமூக ஊடகங்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்…. அர்ஜுன் சம்பத்
சென்னை உயர் நீதிமன்றம் மாண்பமை நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் வி லக்ஷ்மி நாராயணன் அமர்வு வழங்கிய தீர்ப்பு
பொது இடங்களில் மாடுகளை வெட்டி படுகொலை செய்வதை தடை செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மதவெறி அமைப்புக்கள் தங்களது சமூக ஊடகங்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
வழக்கு தாக்கல் செய்த இளைஞர் அணி பொறுப்பாளர் திரு சூர்யா பிரசாந்த்,
இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள், மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைகளை வெட்டுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார்கள்
கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்
நீதிபதிகள்,இமக இளைஞரணி சூரிய பிரசாந்த், இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆகியோருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட கோரி இன்று புகார் மனு சமர்ப்பிக்கப்பட்டது.




