பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் நட்சத்திர கலைவிழா கோலாகலம்
ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீலீலா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு
மாவட்டத்தில் செயல்படும் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் நட்சத்திர கலைவிழா இவ்வாண்டும் விமர்சையாக தொடங்கியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா, 12ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூரில் உள்ள வளாகத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் இசையமைப்பாளருமான மற்றும் நடிகை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், பல ‘சூப்பர் சிங்கர்கள்’ பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீலீலா, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உற்சாகமான சூழலை உருவாக்கியது.