இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு

Date:

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு

திமுக அரசின் நிர்வாக அலட்சியத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப்–2 மற்றும் குரூப்–2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுத் தேர்வுகளை நடத்த தேவையான அடிப்படை வசதிகளையும் சரியாக ஏற்பாடு செய்ய முடியாத அளவிற்கு திமுக அரசு செயலற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுப் பணியை கனவாகக் கொண்டு, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து தயாராகி தேர்வு மையங்களுக்கு சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையும் கனவுகளும் இந்த தவறால் சிதைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இல்லாத இத்தகைய குழப்பம், லஞ்சம் பெற்றே அரசுப் பணிகளை வழங்கியதாக பெயர் பெற்ற திமுக அமைச்சர்களின் நிர்வாகத்தால்தான் ஏற்பட்டதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லஞ்சமும் ஊழலும் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற திமுக அரசை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா – மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள்

இந்தியா – மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பல துறைகளில் முக்கிய...

சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மாரத்தான் ஓட்டப் போட்டி

சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மாரத்தான் ஓட்டப் போட்டி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி...

புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம்

புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம் தமிழகத்தில் நிலுவையில்...

இந்தியர்கள் அனைவரும் பண்பாட்டு அடையாளத்தில் இந்துக்களே – மோகன் பாகவத்

இந்தியர்கள் அனைவரும் பண்பாட்டு அடையாளத்தில் இந்துக்களே – மோகன் பாகவத் இந்தியாவில் வாழும்...