ஏற்காட்டில் அடர்ந்த பனிமூட்டம் – குளிர்ச்சியான வானிலையால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

Date:

ஏற்காட்டில் அடர்ந்த பனிமூட்டம் – குளிர்ச்சியான வானிலையால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்காடு மலைப்பகுதியை திடீரென சூழ்ந்த அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி, அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாள்தோறும் பெருந்தொகை சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஏற்காட்டில், ஏரி அருகே அமைந்துள்ள ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில், பார்வைக்கு சாலை கூட தெளிவாகத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியது.

இதன் காரணமாக, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஏற்றியபடியே மெதுவாக பயணம் மேற்கொண்டனர்.

மேலும், ஏற்காடு மலைச் சுற்றுப்பகுதிகளில் மேகங்கள் தரையைத் தொட்டதுபோல் பனிமூட்டம் பரவியிருந்த காட்சி சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது. இயற்கையின் இந்த அரிய காட்சியை கண்டு அவர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை...

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு புதிய ஊக்கம் – பிரதமர் மோடி

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு புதிய...

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக சார்பில் தனிக்குழு அமைப்பு

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக சார்பில் தனிக்குழு அமைப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் கூடுதல்...

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை அமெரிக்க முன்னாள்...