ஆசிய சக்தி தரவரிசையில் ஜப்பானை முந்தி இந்தியா 3-ஆம் இடத்துக்கு உயர்வு!

Date:

ஆசிய சக்தி தரவரிசையில் ஜப்பானை முந்தி இந்தியா 3-ஆம் இடத்துக்கு உயர்வு!

ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட 2025 ஆசிய வல்லமைச் சுட்டெண் பட்டியலில், ஜப்பானை கடந்த இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார முன்னேற்றமானது, மேலும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் வெளிப்படுத்தப்பட்ட ராணுவத் தகுதிகள் ஆகியவை இந்தியாவை முக்கிய ஆசிய வல்லரசாக முன்னேற்றியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2024-இல் 38.1 புள்ளிகளுடன் நடுத்தர சக்தி நாடாக இருந்த இந்தியா, இந்த ஆண்டில் 40 புள்ளிகளைத் தாண்டி, அமெரிக்கா மற்றும் சீனாவின் பின்னால் மூன்றாவது வலுவான நாடாக ஆசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் மே மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என லோவி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத் திறன் மற்றும் எதிர்கால வளங்கள் எனப்படும் இரண்டு பிரிவுகளிலும் இந்தியா மூன்றாவது நிலையைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக பொருளாதாரப் பகுதியில் இந்தியா, ஜப்பானை பின்னுக்குத் தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கதாக அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் நமது பணிவான வணக்கம் – பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் நமது பணிவான வணக்கம் – பிரதமர்...

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில்...

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் கோலாகலமாக நடந்த பொங்கல் விழா

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் கோலாகலமாக நடந்த பொங்கல் விழா டெல்லியில்...

78வது இந்திய ராணுவ தினம்

78வது இந்திய ராணுவ தினம் இந்திய ராணுவத்தின் முதல் இந்தியர் தளபதியாக கே.எம்....