சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த பரிதாபம்

Date:

சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்திலிருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் 45 முஸ்லிம் பயணிகள் மெக்கா மற்றும் மதினாவுக்கு செல்லும் போது பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது. டீசல் டேங்கரை மோதிய பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 45 பேர் உயிரிழந்தனர், இதில் 18 பெண்கள், 10 குழந்தைகள், 17 ஆண்கள் அடங்கியுள்ளனர்.

உயிரிழந்தோருள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ராம் நகரைச் சேர்ந்த இந்த குடும்பம், உம்ரா புனிதப் பயணத்தை முடித்து மதினாவுக்கு செல்லும் பயணத்தில் இருந்தனர். அவர்கள் இந்தியாவிலிருந்து கடந்த 8 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு, வரும் சனிக்கிழமை தாயகத்திற்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். உயிரிழந்தோருள் 9 பெரியவர்கள் மற்றும் 9 குழந்தைகள் உள்ளனர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள பயணிகள் ஹைதராபாதின் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து மதினாவுக்கு 25 கி.மீ அருகில் இருந்த போது எதிர் வரிசையில் வந்த டீசல் டேங்கரை மோதி விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பேருந்து முழுமையாக தீப்பிடித்து எரிந்து போனது.

பேருந்தில் உள்ளவர்கள் வெளியே வர முயன்றும், வெற்றியடைந்தது இல்லை. இந்த கோர விபத்தில் 45 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவன் மட்டும், அப்துல் ஷோயப், உயிர் தப்பியுள்ளார்; தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் : சீமான் அதிரடி அறிக்கை

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் :...

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து பொங்கல் திருநாளை...

விரதம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் – அண்ணாமலை பேச்சு

விரதம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் – அண்ணாமலை பேச்சு விரதம் இருப்பதன்...

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள் வங்கதேசம்...