பென்னாகரம் அருகே அதிர்ச்சி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரியூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை அளித்த புகாரில் சிக்கிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தருமபுரி ரயில் நிலையம் அருகிலுள்ள தேக்குத் தோப்புப் பகுதியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.