அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் தம்பதிக்கு அம்பானி இல்லத்தில் பிரம்மாண்ட வரவேற்பு
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோரின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர், மணமக்களுக்குத் தங்கள் இல்லத்தில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி அசத்தியுள்ளனர். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விநாயகப் பெருமானுக்குச் சிறப்புப் பூஜை மற்றும் பிரார்த்தனைகள் உள்ளிட்ட பாரம்பரிய இந்து மதச் சடங்குகள் நடைபெற்றன. இதில் அம்பானி மற்றும் டெண்டுல்கர் குடும்பத்தினர் ஒன்றிணைந்து மணமக்களை வாழ்த்தினர். எளிமையும் ஆன்மீகமும் கலந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சி, தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.