வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: மாற்றுத்திறனாளி இந்து பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – சிறுபான்மையினர் அச்சம்!
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிறுபான்மையின இந்துக்கள் மீதான வன்முறைகள் குறையாமல் தொடர்வது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தபோது இந்துக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்கள், தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையிலும் நீடிக்கின்றன. இதன் உச்சகட்டமாக, மாற்றுத்திறனாளி இந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதிய அரசு பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே அரங்கேறியுள்ள இந்த வெறிச்செயலில், மூன்று பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்காப்பு இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே பலத்த கண்டனங்களைப் பெற்றுள்ளதோடு, அங்குள்ள இந்து சமூகத்தினரிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் விதைத்துள்ளது.