இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா?

Date:

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா?

நாட்டில் மீண்டும் மன்னராட்சி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. முன்னாள் மன்னர் வுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் வரும் மார்ச் 5-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

240 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மன்னராட்சி, கடந்த 2008 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நேபாளம் கூட்டாட்சி ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஞானேந்திர ஷாவும் அவரது குடும்பமும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தனர்.

இந்நிலையில், சமீப காலமாக அரசுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு, மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற தொடங்கியது. இதன் காரணமாக, ஞானேந்திர ஷாவும் மீண்டும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

குறிப்பாக, தலைநகர் வில் உள்ள திரிபுவான் சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்த போது, ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் பெரும் கவனத்தை ஈர்த்தன. நேபாளத்தை காப்பாற்ற மீண்டும் மன்னராட்சி அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, பிரதமர் சுசிலா கார்க்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பில், பொதுத்தேர்தலில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடைமுறைதான் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு நேரடியாக அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற விருப்பம் இல்லை என கூறப்பட்டாலும், மன்னராட்சிக்காக போராடும் அமைப்புகளுக்கு அவர் ஆதரவு அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வரும் மார்ச் 5-ஆம் தேதிக்குப் பிறகு தற்போதைய அரசு தொடருமா அல்லது நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி மலருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா: கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு வழிபாடு

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா: கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு வழிபாடு கோவை அருகே...

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல் பரபரப்பு

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல்...

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த...

1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது

1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது சேலம்...