பறவைக் காய்ச்சல் தாக்கம் – நாமக்கல்லில் கோழிப்பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
பறவைக் காய்ச்சல் சம்பவங்களின் பின்னணியில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழி வளர்ப்பு பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோழிப் பண்ணைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல்லில் செயல்படும் பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தலின் பேரில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பணியாளர்கள் கிருமி நாசினி திரவம் மூலம் கை மற்றும் கால்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே பண்ணை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அத்துடன், பண்ணை வளாகத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.