அதிமுகவை விமர்சிக்க ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன தகுதி? – செல்லூர் ராஜூ கடும் கேள்வி
நடிகர் விஜய்யை எந்த மாநிலத்தின் முதல்வராக செங்கோட்டையன் உருவாக்கப் போகிறார் என, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து எஸ்.ஆர்.வி நகரில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.42 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ள புதிய தார் சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்யை வேண்டுமானால் ஒரு கல்லூரியின் முதல்வராக கூட நியமிக்கலாம் என கிண்டலாகப் பேசினார்.
மேலும், செங்கோட்டையனை “செல்லாத நோட்டு” என விமர்சித்த அவர், செங்கோட்டையன் தூய்மையின் அடையாளமா என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.
ஆதவ் அர்ஜூனாவை குறித்து பேசிய செல்லூர் ராஜூ, அவர் தூய்மையின் அடையாளம் என்றும், நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேசுவதில் தவறில்லை என விமர்சனமாக குறிப்பிட்டார்.
ஆனால், ஆதவ் அர்ஜூனாவின் குடும்பம் ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல வளர்ந்ததாகவும், அதனால் அதிமுகவை விமர்சிக்க அவருக்கு எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.