காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்
காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் தன்னை கடுமையாக நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்ததுண்டா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக 110 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற போதுகூட காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுக்க எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்பினால் அது அவர்களின் விருப்பம் மட்டுமே என்றும், அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.