சென்னையில் பார்வையற்ற மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் 7வது நாளாக தொடர் போராட்டம்
ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் ஏழாவது நாளாக முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி, கடந்த புதன்கிழமை முதல் பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் முக்கிய கோரிக்கைகளில், தற்போது வழங்கப்படும் ரூ.1,500 மாத உதவித்தொகையை அண்டை மாநிலங்களைப் போல் ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்பதும், சர்ச்சைக்குரிய அரசாணை எண் 24-ஐ ரத்து செய்து, அரசாணை எண் 20-ஐ அமல்படுத்த வேண்டும் என்பதும் உள்ளிட்ட ஒன்பது அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.