சென்னையில் 49-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம்
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து தொடங்கி வைத்தனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சி, ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறது.
புத்தக வாசிப்பின் அவசியத்தை மாணவர்களிடையே எடுத்துச் சொல்லும் நோக்கில், நந்தனம் ஆவின் பாலகம் அருகிலிருந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை விழிப்புணர்வு நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நடைபயணத்தில் 500-க்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இந்த வாசிப்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.